அதிகாரிகளை கடத்த வீரப்பன் திட்டம்?
கொள்ளேகால்:
கொள்ளேகால் அருகே மலைப்பகுதியில் வீரப்பன் வாகனங்களை நோட்டம் விட்டிருப்பதாகக் கூறும் கர்நாடகப்போலீசார், அதனால் அவன் அதிகாரிகளை கடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக, தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கெஜ்ஜலு குட்டா மலைஉச்சியில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் ஆயுதங்களுடன் இருந்துள்ளதாகவும் அந்த மலைஉச்சியில் இருந்து கவுதள்ள ரோட்டில் செல்லும் வாகனங்களை கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவும்அதிரடிப்படையினரிடம் சில மாடு மேய்ப்பவர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே அதிரடிப்படை போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அப்பகுதியில் யாரும்சிக்கவில்லை.
சதாசிவம் கமிஷன் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, வீரப்பன் வாகனங்களை கண்காணித்து உள்ளதுதற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அவன் முக்கிய அதிகாரிகளை கடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்றுஅதிரடிப் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து வீரப்பனை தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதே போல் ஒகேனக்கல், ஏரியூர், மேட்டூர்,பாலாறு, காவேரிபுரம், அந்தியூர் வனப்பகுதியிலும் அதிரடிப்படையினர் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications