புதுவை பட்ஜெட்: 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இன்று (வியாழக்கிழமை) பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கியவுடனேயே 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாண்டிச்சேரி மாநில நிதியமைச்சருமான ரங்கசாமி இன்று 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல்செய்தார்.
ரங்கசாமி பட்ஜெட்டை படிக்கத் தொடங்கியவுடன், அதிமுக எம்.எல்.ஏ.க்களான அன்பழகன் மற்றும் காசிலிங்கம்ஆகிய இருவரும் இருக்கையிலிருந்து எழுந்து பஸ் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் அதற்கு சபாநாயகர் ராமச்சந்திரன் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து சபையின் மையப்பகுதிக்கு அதிமுகஎம்.எல்.ஏக்கள் இருவரும் சென்று கோஷம் எழுப்பினர்.
தங்களுடைய இருக்கைக்கு சென்று உட்காருமாறு சபாநாயகர் கூறியதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார். இந்த பட்ஜெட்டில் பஸ் கட்டணஉயர்வு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications