தாய்லாந்தில் இலங்கை அமைதிப் பேச்சு
பாங்காக்:
இலங்கை இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெறும் என்று தாய்லாந்துவெளியுறவுத்துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.
அதன் பிறகு நிருபர்களிடம் பேசும்போது, விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் தாய்லாந்திலேயேபேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சம்மதித்துள்ளனர் என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த மாதம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடார் ஹெல்கெசன் சந்தித்த பிறகுதான்பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் ரீதியான, அமைதியான முறையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்தப் பேச்சுவார்த்தையின்முக்கியமான குறிக்கோள் என்று இந்த இரு அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும்தங்கள் நாட்டினால் வழங்க முடியும் என்று தாய்லாந்து அமைச்சர் கூறினார்.
பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூர் அல்லது திருவனந்தபுரத்தில் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் புலிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் இதற்கு இந்தியாவிலுள்ள (குறிப்பாக தமிழகத்திலுள்ள) பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனஎன்பதும் இந்திய அரசும் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் இதுவரை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.












Click it and Unblock the Notifications