சாத்தூர் அருகே விபத்து: மதுரை வேளாண்மை பேராசிரியர் குடும்பத்துடன் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையைச் சேர்ந்த பேராசிரியர்-டாக்டர் தம்பதி தங்கள் மகனுடன் ஒரு கார் விபத்தில் இறந்தனர்.
மதுரை வேளாண்மை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் மார்க்தேவசகாயம் (45). இவருடையமனைவி சசிகலா (35) மேலூரில் அரசு டாக்டராக பணியாற்றுகிறார். இவர்களுடைய மகன் மனோசரண் (11).
ஈஸ்டர் பண்டிகைக்காக மதுரையில் இருந்து அவருடைய சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு 3 பேரும் காரில்சென்றனர்.
சாத்தூர் அருகே சத்திரப்பட்டி விலக்கில் கார் சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது எதிரே வந்த டவுன் பஸ்மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பஸ்சுக்குள் புகுந்து நசுங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் காருக்குள்ளேயே சிக்கிஉடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications