பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு: ஜெ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை வழங்கி சென்னை தனி நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழங்கியதீர்ப்பில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அன்றைய தினமே டான்சி வழக்கிலும் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து,எந்தவிதமான பிரச்சனையும் இன்றி ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று தமிழகமுதல்வராகவும் ஆகிவிட்டார்.
இதற்கிடையே பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்பாரதி மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், இம்மனுவை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் தமிழக அரசுக்கும் இவ்வழக்கில் விடுதலையான மற்ற அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிஎம்.பி. ஷா மற்றும் நீதிபதி ருமா பால் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பாரதி வேண்டுகோள் விடுக்கலாம்என்றும் அந்த பெஞ்ச் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications