ஒருவழியாய் பதவியேற்றார் தலித் பஞ்சாயத்து தலைவர்
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் ஒருவழியாய் சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதனிக்கொடி பதவியேற்றுக் கொண்டார்.
தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது இந்த பஞ்சாயத்து யூனியன். ஆனால் பாப்பாப்பட்டியில் பெரும்பான்மையாக இருப்பதுஇன்னொரு சமூகத்தினர். இதனால் தலித் ஒருவர் எங்களுக்குத் தலைவராக வருவதை ஏற்க முடியாது என்று அவர்கள் தேர்தலைநடத்த விடாமல் தடுத்து வந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து பலத்தபாதுகாப்புடன் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.
ஆனால், போலீஸ் பாதுகாப்பு இருந்தும் கூட இங்கு போட்டியிட்ட தலித் வேட்பாளர்கள் இத் தொகுதியில் முழுவதுமாக பிரச்சாரம்செய்ய முடியவில்லை. அவர்கள் பிரச்சாரம் செய்ய தங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என்று மாற்று சமூகத்தினரால்தடுக்கப்பட்டுவிட்டனர்.
ஒரு வழியாய் பிரச்சாரம் முடிந்து தேர்தலும் வன்முறை இன்றி நடந்து முடிந்தது. இத் தொகுதியுடன் சேர்த்து கீரிப்பட்டி மற்றும்இன்னொரு தலித் தொகுதியிலும் யில் தேர்தல் நடந்தது.
இதில் பாப்பாபட்டியில் பொதுமக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட தனிக்கொடி என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து தனிக்கொடிவியாழக்கிழமை தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
செல்லம்பட்டி யூனியன் துணை தேர்தல் அதிகாரி ராம் மனோகர் லோஹியா முன் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைவர் தனிக்கொடியை தேர்தல் அதிகாரியும், செலமல்பட்டி கமிஷனருமான பார்த்தசாரதிஉள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
-சில வருடங்களுக்கு முன் கீழவளவில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் இதே போன்ற பிரச்சனை காரணமாக வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து தலித் தொகுதிகளில் போடடியிடவே தலித்கள் அஞ்சும் நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.
இப்போது பதவியேற்றுள்ள தலித் பஞ்சாயத்துத் தலைவர் தனிக்கொடிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்குஉள்ளது.