இன்று ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் லோக்சபாவில்தோல்வியடைந்ததையடுத்து, இன்று ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் லோக்சபாவில் அதிகம் என்பதால், அங்கு 94 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு எளிதாக வெற்றி பெற்று விட்டது.
ஆனால் ராஜ்யசபாவில் ஆளுங்கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இன்று நடக்கும்ஓட்டெடுப்பின்போது எதிர்க் கட்சிகளின் தீர்மானம்தான் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 81 எம்.பிக்கள் உள்ளனர். ஆனால் எதிராக நூற்றுக்கும் மேற்பட்டஎம்.பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் நடக்கும் ஓட்டெடுப்பையும் தெலுங்கு தேசம் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் புறக்கணிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications