சட்டசபையைக் கலக்கிய மதுரைப் புயல்
சென்னை:
மதுரை கிழக்குத் தொகுதி தமாகா எம்.எல்.ஏவான ஹக்கீம், சட்டசபையில் வியாழக்கிழமை பேசிய பேச்சு பெரும்கலகலப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்தார். பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில்,
என்னவென்றே தெரியவில்லை, இந்த மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது. நான் பேசும்போது அடிக்கடி மக்கர்செய்கிறது.
இதை என்னவென்று சபாநாயகர்தான் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் (அவையில் சிரிப்பு).
நான் இடம் மாறி உட்கார்ந்தால் அவையில் கடும் எதிர்ப்பு வருகிறது (மீண்டும் அவையில் சிரிப்பு). ஆனால் அப்படிஉட்கார்ந்து பேசினால்தான் மைக் நன்றாக இருக்கிறது. இப்போது மக்கர் செய்கிறது (தொடர்ந்து அவையினர்சிரிப்பு).
எனக்கு ஒரே ஆச்சரியமாக உள்ளது. இதேபோன்ற மைக்கில்தான் நிதியமைச்சர் பொன்னையன் நான்கே முக்கால்மணி நேரம் பேசியுள்ளார். இது பெரிய சாதனையாக உள்ளது. ஒரே மராத்தான் பேச்சுதான் (சிரிப்பு).
காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கூட இவ்வளவு நேரம் ஐ.நா. சபையில் பேசியதில்லை (சிரிப்பு). ஆனால் இந்தமைக்கில் இத்தனை மணி நேரம் பொன்னையன் பேசியிருக்கிறார் என்றால் நிச்சயம் அது கடவுள் சித்தம்தான்.பொன்யைனுக்கு கடவுள் அருள் நிறையவே இருக்கிறது என்று நினைக்கிறேன் (அவையினர் பலத்த சிரிப்பு) என்றுபேசிக் கொண்டே போனார் ஹக்கீம்.