நெல்லை ரயில் என்ஜினில் திடீர் தீ: பயணிகள் தப்பினர்
திருநெல்வேலி:
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலின் என்ஜினில் திடீர் தீ ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ரயில்நிறுத்தப்பட்டது. பயணிகள் எந்தவித ஆபத்துமின்றி தப்பினர்.
நெல்லை-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில் ஓடுகிறது. இந்த ரயில் நேற்று (திங்கள்கிழமை) மாலைதிருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.
பாளையங்கோட்டைக்கும், செய்துங்கநல்லூருக்கும் இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த ரயில்என்ஜினில் திடீர் என்று தீ பிடித்துக் கொண்டது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் செல்வராமகிருஷ்ணன், உடனடியாக ரயிலை நிறுத்தினார். மற்றபெட்டிகளிலிருந்து என்ஜினை பிரித்தார். பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு இறங்கினர்.
டிரைவரின் சமயோஜிதம் காரணமாக பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்துகன்னியாகுமரி மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் 90 நிமிடம் தாமதமாக சென்றன.












Click it and Unblock the Notifications