பாகிஸ்தானில் மனித குண்டு வெடித்து 14 பேர் பலி
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று காலை ஒருவன் தன் உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு, ஒருகாரில் சென்று அந்நாட்டுக் கடற்படைக்குச் சொந்தமான ஒரு பஸ்சில் சென்று மோதியதில், அந்த பஸ் வெடித்துச்சிதறி 10 பிரான்ஸ் நாட்டினர் உள்பட 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இன்று காலை 7.10 மணிக்கு ஷெராட்டன் ஹோட்டலின் போர்ட்டிகோவில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம்நிகழ்ந்தது.
கராச்சியில் உள்ள துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல ஊழியர்களும்ஈடுபட்டிருந்தனர்.
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து துறைமுகத்திற்குக் கிளம்பும்போதுதான் இந்தப் பயங்கரக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. திருடிய காரைக் கொண்டுதான் ஒருவன் அந்த பஸ்சில் மோதி வெடிக்கச்செய்துள்ளான்.
இந்த ஹோட்டல் இருந்த அதே தெருவின் மறு பகுதியில்தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்தனர்.இந்த வெடிகுண்டுச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனேயே, அவர்கள் தங்கள் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தைஉடனடியாக முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்றுதான் கராச்சியில் துவங்குவதாகஇருந்தது.
இந்தக் குண்டு வெடிப்புக்கு இன்னும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications