ஈரோடு: விஷ உணவு சாப்பிட்ட 4 தோட்ட தொழிலாளர்கள் பலி
ஈரோடு:
ஈரோடு அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 9 தோட்டத் தொழிலாளர்களில் 4 பேர் பலியானார்கள். மற்ற 5பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள 30 குடும்பங்கள் கரும்புக் காட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள்வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் உள்ள நடுப்பாளையில் கூடாரமிட்டு வசித்து வருகின்றனர்.
தினமும் தங்கள் வேலைகளை முடித்த பின்னர், அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வெட்ட வெளியில்உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
தொப்பலி (13), சங்கீதா (19), பாலமுருகன் (20) , அஞ்சலை (27), செல்வராஜ் (28), மாரியம்மாள் (30), பாப்பாத்தி(35) மற்றும் பிச்சையம்மாள் (40) உட்பட 9 பேர் நேற்று தனியாக உணவு சமைத்தனர்.
இந்த 9 பேரும் தாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடும்போது, உணவு கசப்பாக இருந்ததை உணர்ந்தனர். உணவில்பச்சிலை விழுந்திருக்கலாம் என்று நினைத்து மீதி உணவையும் அவர்கள் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட அரைமணி நேரத்திலேயே அனைவரும் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்.
மயங்கி விழுந்தவர்களை மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.இதில் பாலமுருகன் மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயேஉயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மீதி ஐந்து பேரும் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவில் விஷ இலை விழுந்ததா அல்லது விஷ ஜந்து விழுந்ததா என்பது பற்றி தெரியவில்லை என்று டாக்டர்உசேன் அலி கூறினார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இந்த 9 தொழிலாளர்களும் சேர்க்கப்பட்ட பிறகும், அரை மணி நேரம் கழித்தேடாக்டர்கள் வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். டாக்டர்களின் இந்த அலட்சியத்தால்தான் 2 பேர்உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications