போலி பெண் டாக்டர் கைது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் போலி பெண் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரில் வடக்கு மாதவி வீதியில் வசித்து வருபவர் மும்தாஜ் (45 ). இவர் தேவராஜன் நர்சிங் ஹோம் என்ற பெயரில்மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மருத்துவராக பணிபுரிவதற்குரிய எந்த தகுதியும் இல்லை. இவர்கம்பவுண்டருக்குக் கூட படித்ததில்லை.
இருப்பினும், அவர் தனது மருத்துவமனையில் வைத்து நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஊசி போடுவது, குளுக்கோஸ்ஏற்றுவது என்று டாக்டர் வேலைகளைக் காட்டி வந்தார்.
சமீபத்தில் இவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்ட சத்யா ( 21 ) என்ற பெண் கடும் வயிற்று வலியால்பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது பெற்றோர் டாக்டர் மும்தாஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு மும்தாஜ் மீதுசந்தேகம் வரவே போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மும்தாஜிடம் விசாரித்தனர். அவரிடம் சான்றிதழ்களைக் கேட்டபோது அவர் திருதிருவெனமுழித்தார்.
இதையடுத்து அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications