ராதாரவிக்காக நடையாய் நடக்கும் அமைச்சர்கள்
சென்னை:
அப்பா எம்.ஆர். ராதாவின் கரகரப்பு குரலில் பேசியவாறும், கூப்பிய கைகளுடனும் வீடு வீடாக சென்று சைதாப்பேட்டையில்ஓட்டுக் கேட்டு வருகிறார் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் ராராதவி.
திமுகவின் தீவிர தொண்டனாக இருந்த ராதாரவி 3 ஆண்டுகளுக்கு முன் அதிகவில் சேர்ந்தார். அது முதல் எந்தப் பதவியும்வழங்கப்படாத ராதாரவி, இப்போது எம்.எல். ஏ தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு, திமுகவின் கோட்டையான சைதாப்பேட்டையில்களம் புகுந்துள்ளார்.
இங்கு கடும் வெயிலையும் மீறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் ராதாரவி.
சைதாப்பேட்டையில் அவர் வீதி வீதியாக நடந்து சென்று வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து ஓட்டுக் கேட்டு வருகிறார்.அவருடன் முன்னாள் முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார், நைனார் நாகேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சுதர்சனம் ஆகியோரும் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுகேட்டனர்.
இந்தத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவின் தலைவராக பன்னீர் நியமிக்கப்பட்டுள்ளார். எப்படியும் வெல்லவேண்டும் என்ற வெறியுடன் அதிமுக உள்ளது. தொகுதி வேட்பாளருக்கு உதவ பன்னீர் தலைமையில் 7 அமைச்சர்களும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் பணமும் புகுந்து விளையாடுகிறது.












Click it and Unblock the Notifications