இடைக்கால அரசு: புலிகளுக்கு உத்தரவாதம் தரவில்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இடைக்கால அரசு அமைப்பது குறித்து விடுதலைப்புலிகளுக்கு எந்தவிதமான உறுதிமொழியும் தரப்படவில்லைஎன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இடைக்கால அரசு குறித்து புலிகள் பேசலாம்என்று மட்டும் தான் கூறியுள்ளோம். இதைத் தவிர வேறு எந்த உறுதிமொழியையும் நாங்கள் தரவில்லை என்றுரணில் கூறியுள்ளார்.

மத்தாரையில் புத்தமத நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில்,

தமிழர் பகுதிகளில் சுயாட்சி பெற்ற இடைக்கால அரசு அமைப்பது குறித்து முதலில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைநான் பெற்றாக வேண்டும். அதற்கும் மேலாக இதற்கு மக்களின் ஆதரவையும் நான் பெற வேண்டும். இது மிகஅவசியம். நானாக இந்த இடைக்கால அரசு அமைய அனுமதி தந்துவிட முடியாது.

மேலும் புலிகளின் "தனித் தமிழ் ஈழம்" என்ற கோரிக்கையையும் ஏற்க இயலாது. 25,000 சதுர மைல்கள்பரப்பளவுள்ள இந்த நாட்டு அனைத்துப் பிரிவினருக்கும் சொந்தமானது என்றார் ரணில்.

வடகிழக்கில் வாழும் மக்களுக்காக இடைக்கால கவுன்சில் அமைத்துத் தரப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில்நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி அளித்திருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நடக்கும் பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசு குறித்து மட்டுமே பேசப் போவதாக புலிகளும்அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+