தமிழகத்தில் மின்வெட்டு குறையுமா?
திருநெல்வேலி:
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு நிரந்தரமானதல்ல, விரைவில் இது சீரடையும் என மாநில மின்துறை அமைச்சர் நைனார்நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று அரசு கூறி வருகிறது. ஆனால், சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாக உள்ளது.
நகர்ப்பகுதிகளில் தினசரி 1 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. பிற நகரங்களை விட சென்னையில்எப்போதும் மின்வெட்டு குறைவாகத் தான் இருக்கும். ஆனால், இம்முறை மின்வெட்டு கடுமையாகவே உள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 3 முறை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
இந் நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழகத்தில் மின்வெட்டு விரைவில் சீரடையும். மின் உற்பத்தி சீராக உள்ளது. பாபநாசம் நீர் மின் உற்பத்தி நிலையத்தைமேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மின் உற்பத்தி நிலைமை மேலும் சீரடையும் என்றார்.
தென் இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஊழல், சுருட்டல்இருந்தாலும் கூட பல்வேறு பெரிய திட்டங்களை அடுத்தடுத்து வந்த அரசுகள் தொடர்ந்து நிறைவேற்றி வந்துவிட்டன. இதனால்,மின் வெட்டு பெரிய அளவில் குறை கூறும் வகையில் இல்லை.
ஆனால், கர்நாடக்ததில் நிலைமை மிக மோசம். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கியும் கூடபெரும் பற்றாக்குறை. சிலிக்கன் சிட்டியான பெங்களூரில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு அமலில்உள்ளது. கிராமப் பகுதிகளில் சில மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் உள்ளது.












Click it and Unblock the Notifications