For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்-தூத்துக்குடி ரயிலில் கொள்ளை: 2 பேருக்கு கத்திக் குத்து

By Staff
Google Oneindia Tamil News

திருப்பத்தூர்:

பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை பயங்கரகொள்ளை நடந்தது. பயணிகளை கத்தியால் குத்தி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளையும்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

நேற்றிரவு 9.50 மணிக்கு பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த ரயில், இன்று அதிகாலைசுமார் 1.30 மணியளவில் திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு ரிசர்வ் பெட்டியில்உட்கார்ந்து இருந்த 4 பேர் திடீரென அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.

இதையடுத்து ரயிலை டிரைவர் அவசர பிரேக் போட்டு நிறுத்தினார். இதையடுத்து அந்த நான்கு பேரும் எழுந்து,அந்தப் பெட்டியிலும் அருகில் இருந்த 3 பெட்டிகளிலும் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளைத் தட்டி எழுப்பினர்.

பின்னர் அந்தப் பயணிகளிடம் கத்தியையும் அரிவாளையும் காட்டி மிரட்டி நகைகளையும் பணத்தையும் பறித்தனர்.அவர்கலைப் பார்த்து கூக் குரல் எழுப்பிய பெண் பயணிகள் உடனே தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றித்தந்துவிட்டனர்.

நகை, பணத்தைத் தர மறுத்து போராடிய இரு ஆண் பயணிகளை கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இதில்அவர்கள் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த மற்றவர்கள் மறுபேச்சு பேசாமல் நகைகளைக் கழற்றித் தந்தனர்.

அரைகுறைத் தூக்கத்தில் இருந்த பயணிகளிடம் கத்தியையும் அரிவாளையும் கொள்ளையர்கள் காட்டிமிரட்டியதால் அவர்களால் சுதாரிக்கக் கூட முடியவில்லை. சில நிமிடங்களில் நகை, பணத்தைப் பறித்துக் கொண்டுஅந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்து இறங்கி இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர்.

இச் சம்பவத்தால் அனைத்துப் பயணிகளும் விழித்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு இருந்த ரயில்வே போலீசாரும்ரயிலின் கார்டும் என்ஜின் டிரைவரும் ஓடி வந்தனர். பயணிகளுக்கு கத்துக் குத்துக் காயம் ஏற்பட்டிருந்ததால் ரயில்உடனடியாகக் கிளப்பப்பட்டது. அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து, கொள்ளையர்களைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்ற ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சமீப காலங்களில் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ரயிலில் போலீசார் சம்பவம் நடந்தபோது என்ன செய்து கொண்டிருந்தனர்என்று தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலான பல்லவனில் கொள்ளை நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X