தருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு பஸ்சில் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

தருமபுரி:

தருமபுரி அருகே அரசு பஸ் ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து, துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடமிருந்துநகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன.

வேலூரிலிருந்து ஈரோட்டிற்கு நேற்று அதிகாலை இந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம்அரூரை அடுத்த கோம்பூர் அருகே ஒரு சாலையோர டீக்கடையில் காலை 3 மணிக்கு நிறுத்தப்பட்டது.

டிரைவர், கண்டக்டர் மற்றும் சில பயணிகள் டீ குடிப்பதற்காகக் கீழே சென்றவுடன், அந்த பஸ்சிற்குள் 6 பேர்கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது. துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை அவர்கள்வைத்திருந்தனர்.

பின்னர் திடீரென்று அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டனர். இதைத் தொடர்ந்துதுப்பாக்கி முனையிலேயே பஸ்சிற்குள் இருந்த பயணிகளை மிரட்டி, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தைப்பிடுங்கிக் கொண்டனர்.

அதன் பிறகு அந்தக் கும்பல் பஸ்சை விட்டு இறங்கி, இருளில் ஓடி மறைந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும்பணத்தின் மதிப்பு ரூ.1.3 லட்சம் என்று தெரிகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தருமபுரி போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+