அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள அரசு ஊழியர் விருப்ப வி.ஆர்.எஸ். திட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இது விருப்ப ஓய்வுத் திட்டம் அல்ல. கட்டாய ஓய்வுத் திட்டம். தாங்களாகவே பதவி விலக மறுக்கும்ஊழியர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது, பதவி மட்டுமே காலியாகும் என்று தமிழக அரசுமிரட்டுகிறது. இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.
தொழிலாளர்களுக்கு இழப்பு ஏதும் இல்லாமல் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இத் திட்டம்இருந்தால் தான் அதை ஆதரிக்க முடியும்.
ஆனால், இத் திட்டத்தை ஒரு மாதத்தில் ஏற்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.அவர்கள் நிர்பந்திக்க்பபட்டு பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்றார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அரசின் இது போன்ற செயல்களால்தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.