சைதையில் 75 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: போலீஸ் கமிஷ்னர்
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை தொகுதியில் 15 இடங்களில் அமைக்கப்படவுள்ள 75 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர்விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் விஜயகுமார் கூறியதாவது:
வரும் 31ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை தொகுதியில் 15 இடங்களில் உள்ள 75வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே இந்த இடங்களில் தேர்தல் அமைதியாக நடப்பதற்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
சுமார் 1,600 போலீசார் இந்தப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்படுவார்கள்.
சென்னையில் ஆங்காங்கே கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும் சட்டம்-ஒழுங்குபாதிக்கப்படும் ரீதியில் பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.
போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் போலி சான்றிதழ்களை ஒழித்துக் கட்டுவதற்கு சென்னை போலீசார் தக்கநடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றார் விஜயகுமார்.












Click it and Unblock the Notifications