புதிய சட்டப்படி பதவியை உதறினார் அதிமுக எம்.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டத்தின் கீழ் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி சையத் கான், தனது டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவியைராஜினாமா செய்துள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டம் சமீபத்தில் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஸ்டாலினின் மேயர் பதவி அல்லதுஎம்.எல்.ஏ. பதவி இதில் ஒன்றைப் பிடுங்கவே இச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சட்டப்படி விரைவில் தனது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார் ஸ்டாலின்.
இந் நிலையில், புதிய சட்டப்படி தனது ஒரு பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதிமுக எம்.பி சையத் கான்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் டவுன் பஞ்சாயத்துத் தலைவராக உள்ள சையத் கான் சமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக ஜெயலலிதாவால்நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தனது டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications