பழனியில் வைகாசி விசாக விழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி முருகன் கோவில் வைகாசி விகாசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது.
நேற்று முன் தினம் இரவு பெரிய நாகியம்மன் எனப்படும் ஊர்க்கோவிலில் இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.நேற்று காலை மதுர யாகம் நடைபெற்றது.
பின்னர் காப்பு கட்டுதல், வாத்திய பூஜை, தவில் பூஜை ஆகியவை நடந்து முடிந்ததும் கொடியேற்றத்துடன் வைகாசிவிசாக விழா தொடங்கியது.
இந்த திருவிழா பத்து நாட்கள் வரை நடைபெறும். வரும் 24ஆம் தேதி இரவு வள்ளி மற்றும் தெய்வானையுடன்முருகப் பெருமானின் திருமண விழா நடைபெறும்.
இதைத் தொடர்ந்து 25ஆம் சிறப்புத் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications