அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்: கருணாநிதி பிரச்சாரம்
வாணியம்பாடி:
அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வாணியம்பாடியில் திமுக வட்பாளர் நாகூர் ஹனீபாவை ஆதரித்து இரணடாவது நாளாக இன்று பிரச்சாரத்தில்ஈடுபட்டார் கருணாநிதி. அப்போது அவர் பேசியதாவது:
வரிகள், கட்டண உயர்வுகள், மின் பஸ் திட்டத்தை நிறுத்துவது, உழவர் சந்தைகளில் கை வைப்பது, மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்குவது, அரசு ஊழியர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைப்பது எனஅராஜகம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
மக்கள் விரோத அரசுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது அதிமுக அரசு.
எதற்கெடுத்தாலும் முன்பிருந்த திமுக ஆட்சியை குறை கூறுவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் அந்தஅம்மையார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் தான் நிதித் தட்டுப்பாட்டு இருந்தது. அதற்காக மக்கள் மீதாவரியைப் போட்டு வதைத்தோம்?
திமுகவுக்கு வாக்களித்தால் தான் மக்களின் குரல் எடுபடும். நாகூர் ஹனிபாவுக்கு வாக்களித்து அதிமுகவுக்கு பாடம்புகட்டுங்கள்.
ஹனீாபாவுக்கும் இந்தத் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள்? ஹனீபா என்ன வெளியாளா? அவர்தமிழகம் முழுக்கவும் பரிச்சயமான மனிதர். அவர் வாணியம்பாடிக்கும் சொந்தக்காரர் தான் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications