ஜூன் 24 முதல் இன்ஜினியரிங் கவுன்சலிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஒற்றை சாரள முறை கவுன்சலிங் வரும் ஜூன் மாதம்24ம் தேதி தொடங்கவுள்ளது.
இது குறித்து அண்ணா பல்களைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கவுன்சலிங் வரும் ஜூன் 24ம் தேதி தொடங்கஇருக்கிறது.
சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களிலும் கவுன்சலிங் நடக்கும். வரும் ஜூலை 15ம் தேதிஇன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் போன்ற அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியானதரமான கல்வியே வழங்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications