அதிமுகவினர் மின் திருட்டு: இளங்கோவன் எச்சரிக்கை
ஈரோடு:
வாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் போது மின்சாரம் திருடப்பட்டது மற்றும் அரசுஎந்திரங்கள் முறைகேடாகப் பயன்பட்டது ஆகியவற்றுக்காக அத்தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்தல் கமிஷன்தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா வருகையையொட்டி சுமார் 2,000 டியூப் லைட், மைக் செட் மற்றும் மின் விளக்கு அலங்காரம்ஆகியவற்றுக்காக அதிமுகவினர் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடியுள்ளனர்.
மேலும் ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன.
இந்தக் காரணங்களுக்காக வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரான வடிவேலுவை அங்கு போட்டியிடமுடியாதவாறு தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் வாணியம்பாடியில் ஜெயலலிதா இரவு 10.45 மணி வரை பிரச்சாரம் செய்துள்ளார். அவரையெல்லாம்கண்டு கொள்ளாமல் திமுக தலைவர் கருணாநிதி மீது மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பிரச்சாரம்செய்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆளும் கட்சியினருக்கு ஒரு நீதி, எதிர்க் கட்சியினருக்கு ஒரு நீதி தான் இங்கு கிடைத்து வருகிறது.
வரும் ஜூலை மாத இறுதிக்குள் காங்கிரசுடன் தமாகா இணைந்து விடும். அப்போது தமாகாவினர் கேட்கும்பதவிகள் சம பங்காகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications