எல்லை பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு மேற்கொண்டுள்ளமுயற்சிகளில் ஒரு படி முன்னேறியுள்ளோம் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருந்துவருகிறது.

இதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ்புஷ் வசிக்கும் வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்த வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

இதற்கிடையே போரைத் தவிர்க்கும் முயற்சியாக பாதுகாப்பு தொடர்பான நவீன செயற்கைக் கோள்தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்குத் தேவையான அனைத்துமுயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபரான ரிச்சர்டு செனாயும் தெரிவித்துள்ளார்.

அணுகுண்டுகளை வைத்துள்ள இரு நாடுகளும் உலகின் மிக மோசமான இடத்தில் அமைந்துள்ளன என்றும்செனாய் கூறினார்.

இதற்கிடையே நாளை மாஸ்கோவில் நடைபெறவுள்ள கிரெம்ளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாசெல்கிறார் புஷ். அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று புஷ்சை வற்புறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+