போர் வராது என்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் போர் இருக்காது என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மூன்று நாள் காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன் பத்திரிக்கைநிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனவரி 12ம் தேதி பாகிஸ்தான் டெலிவிஷன் மூலம் தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப், தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் அவர் தன்னுடைய உறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டார்.
காஷ்மீரில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுநடத்தவே விரும்புகிறோம். விரைவில் நான் மீண்டும் காஷ்மீர் வருவேன். அப்போது அனைத்துக் கட்சிகளையும்சந்தித்துப் பேசுவேன்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுநடத்தவே விரும்புகிறோம். விரைவில் நான் மீண்டும் காஷ்மீர் வருவேன். அப்போது அனைத்துக் கட்சிகளையும்சந்தித்துப் பேசுவேன்.
காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.6,165 கோடி மதிப்பிலான புதிய பொருளாதார வசதிகளை மத்திய அரசு அளிக்கும்.
287 கி.மீ. நீளமுள்ள உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித் தடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2007ம்ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்றார் வாஜ்பாய்.
போர் மேகம் ஏதும் சூழ்ந்திருக்கிறதா என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்குப் பதிலளித்த வாஜ்பாய், அது போன்றமேகம் ஏதும் வானத்தில் இருக்கிறதா என்று வானத்தைப் பார்த்தேன். ஆனால் வானம் சுத்தமாகத் தான் இருந்ததுஎன்றார்.
ஆனால் மின்னல் போன்று பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்றும் வாஜ்பாய் கூறினார்.
இந்தப் பதற்றமான சூழ்நிலை இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இருப்பினும் எந்த ஒரு சவாலையும்சந்திப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் வாஜ்பாய்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications