For Quick Alerts
For Daily Alerts
Just In
விரைவில் பெண்களுக்கான "நிரோத்"
மதுரை:
பெண்கள் பயன்படுத்தக் கூடிய கர்ப்பத் தடை உறைகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனத்தின்மார்க்கெட்டிங் பிரிவு செயல் இயக்குனர் அய்யப்பன் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் இந்த உறைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைசெய்யப்படும். அதன் பிறகு படிப்படியாக இங்கேயே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும்.
ஒரு உறையின் விலை ரூ. 25 ஆக இருக்கும். இந்த வகை பெண்களுக்கான கர்ப்பத்தடை சாதனங்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஐரோப்பியநாடுகளில் புழக்கத்தில் உள்ளன. நல்ல வெற்றியையும் பெற்றுள்ளன.
இந்த வகை உறைகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார் அய்யப்பன்.
ஆணுறையான நிரோத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments