பிறந்தவுடன் அனாதையான இரட்டைக் குழந்தைகள்
சேலம்:
பிறந்த சில நாட்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுந்து விழாத நிலையில் 3 பெண் சிசுக்களைமருத்துவமனையிலேயே விட்டு விட்டு அவர்களைப் பெற்ற அம்மாக்கள் தலைமறைவாகி விட்டனர். இதில் இருசிசுக்கள் இரட்டைக் குழந்தைகள்.
இந்த மூன்று பெண் சிசுக்களும் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்தன.கலைவாணி என்பவருக்கு ஒரு குழந்தையும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகளும்பிறந்தன.
பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என்றும் பெண் குழந்தையுடன் வீட்டுக்குப் போனால் மதிக்க மாட்டார்களேஎன்றும் கவலைப்பட்ட கலைவாணியும் தனலட்சுமியும் தங்களது குழந்தைகளைப் பரிதவிக்க விட்டு விட்டுமருத்துவமனையை விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இப்போது 3 சிசுக்களும் தாய் முகத்தைக் காணாமல் தவித்து வருகின்றன. மருத்துவமனை ஊழியர்கள் 3 பெண்குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications