உலக சாதனை நோக்கி ஊட்டி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஒரே நாளில் 40,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்க நீலகிரி மாவட்டம் முடிவு செய்துள்ளது.
ஒரே நாளில் 40,000 மரக் கன்றுகளை ஒரே பகுதியில் நட்டு இந்த சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.
இதற்காக ஊட்டி அருகே கடனாடி என்ற இடத்தில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வருகிற 16ம் தேதி இந்த நாற்பதாயிரம் மரக்கன்றுகளும் நடப்படும்.
மாவட்டத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது நல அமைப்புகளின் உதவியுடன் தமிழக வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்தமுயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை இருந்து வரும் கனடா நாட்டு சாதனை முறியடிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications