பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோலிய குரூட் எண்ணெயின்விலை உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.70 ரூபாயும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 1.75ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த விலை உயர்வு உள்ளூர் வரிகளைப் பொறுத்துமாநிலத்துக்கு மாநிலம் நகருக்கு நகர் மாறுபடும்.

சென்னை உள்பட தமிழகத்திலும் பெட்ரோலின் விலை இனி லிட்டர் ரூ. 31.05 ஆக உயரும். இதுவரை இந்த விலைரூ. 28.49 ஆக இருந்து வந்தது.

அதே போல டீசல் விலை லிட்டர் ரூ. 19.23 ஆக உயரும்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு பேரல் பெட்ரோலிய எண்ணெயின் விலை 5 டாலர் அளவுக்கு உயர்ந்தது.ஆனால், இந்தியா விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது. இதனால் நாளொன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ. 80கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

திருட்டு பங்குகள்:

பெட்ரோல் விலையை அரசு உயர்த்தப் போகிறது என்று தெரிந்தவுடனயே இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானபெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை போர்டுகள் தொங்கின. இன்று நள்ளிரவுக்குப் பின் விற்றால் அதிகவிலைக்கு விற்கலாம் என்பதால் பெட்ரோல், டீசலை வைத்துக் கொண்டே இவர்கள் திருட்டுத்தனம் செய்துவருகின்றனர்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் தெலுங்கு தேசம் கட்சி பெட்ரோல் விலையைஉயர்த்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+