திருச்சி: ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்த ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் தடம்புரண்டது.
நேற்றிரவு இந்த ரயில் சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்டது. காலை 5.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தைஅடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பொன்மலை ரயில்வே பணிமனைக்குப் புறப்பட்டது.
ஆனால், அப்போது ரயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்தைவிட்டு கீழிறங்கி தடம் புரண்டது. கீழே இறங்கியபெட்டியோடு அந்த ரயில் சிறிது தூரம் சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் தடம்புரண்டதால் தென் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் ரயில்கள் வேறு வழியாக சுற்றிக் கொண்டுதிருச்சி ரயில் நிலையத்தை அடைந்து வருகின்றன.
சமீபகாலமாக ரயில்கள் தடம்புரள்வது மிகவும் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications