For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு வாழ்த்து, ஜெயாவுக்கு ஜால்ரா: இது வீரமணி பாலிட்டிக்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மூன்றாவது அணியை தமிழக மக்கள் நிராகரித்து விட்டதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இடைத் தேர்தல் முடிவுகள் பல விஷயங்களை நமக்குப் புலப்படுத்துகிறது. 3-வது, 3-வது அணி என்று சிலர் தமிழகத்தில் கூறி வருகிறார்கள்.ஆனால் அப்படி ஒரு அணியே தேவையில்லை என்று மக்கள் தங்களது தீர்ப்பு மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். 3-வது அணியைஅவர்கள் நிராகரித்து விட்டார்கள்.

அதிமுக அரசினால் மட்டுமே தங்களுக்கு நல்லது செய்ய முடியும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி அமைக்க முடியும் என்றுமக்கள் நம்புகிறார்கள். (கடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக உள்ள வீரமணி அவ்வப்போது அரசியல்ஆலோசனைகளையும் தந்து வருகிறார்).

முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது 79வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவர் நல்ல ஆயுளுடன், நீடூழி வாழவாழ்த்துகிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி. (வீரமணியிடம் இப்போதெல்லாம் வீரம் இல்லை,ஜெயலலிதாவுடன் சேர்ந்ததால் மணி தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு வருகிறார் கருணாநிதி என்பதுகுறிப்பிடத்தக்கது).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X