எல்லையில் வீர மரணம் அடைந்த 2 தமிழக வீரர்கள்: இன்று உடல் தகனம்
ராஜபாளையம் & வேலூர்:
காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதில் ராஜபாளையத்தைச் சேர்ந்தராமகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். அதே போல காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர்மாவட்ட வீரர் நாராயணன் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன். இவர் ஆக்ராவில்உள்ள பாராசூட் படைப் பிரிவில் கமாண்டோவாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் எல்லைப் பகுதிக்குஅனுப்பப்பட்டார்.
அங்கு சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.
அவருடைய உடல் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில்ராஜபாளையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளரும் சிவகாசி எம்.பியுமான வைகோ மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கோபால்உள்ளிட்ட ஏராளமானவர்கள் ராமகிருஷ்ணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ராமகிருஷ்ணனின் உடல் இன்று காலை முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
35 வயதாகும் ராமகிருஷ்ணனுக்கு மனைவியும் 6 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளனர்.
வேலூர் ராணுவ வீரர் பலி:
ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் ராணுவ வீரர் கண்ணி வெடியில் சிக்கி மரணமடைந்தார்.இவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான வேலூருக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
வேலூரில் உள்ள கம்மவார்பேட்டையைச் சேர்ந்த மணி என்பவரது மகன் நாராயணன் (23). ராணுவ வீரரான இவர்ஜம்முவில் பணியாற்றி வந்தார். ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இவர் தீவிரவாதிகள் வைத்தகண்ணி வெடியில் சிக்கி, அதே இடத்தில் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த நாராயணனின் உடல் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.பின்னர் சென்னையில் இருந்து கம்மவார்பேட்டைக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
நாராயணனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ்மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் நாராயணனின் உடல் தகனம்செய்யப்படுகிறது.
நாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை மற்றும் 2சகோதரர்களும் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா இரங்கல்:
இதற்கிடையே நாராயணனின் வீர மரணத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.
மேலும் நாராயணனை இழந்து வாடும் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் அவருடையகுடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் வில்வநாதன், வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோர்நாராயணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.