வேலைக்குப் போகச் சொன்னதால் மாமியாரைக் கொன்ற மருமகன்
சென்னை:
வேலைக்குப் போகச் சொன்னதால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
சென்னை அருகே உள்ள திருவொற்றியூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுமதியின் கணவர் காந்தி.சுமதி இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
பள்ளிக்கரணை பகுதியில் முன்பு வேலை பார்த்து வந்த காந்தி கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல்மாமியார் வீட்டில் இருந்து வந்தார்.
இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறீர்களே என்று மாமியார் விஜயலட்சுமிஅடிக்கடி காந்தியை கடிந்து கொள்வது வழக்கம். இதனால் மாமியார் மீது காந்தி கோபமடைந்தார்.
இதையடுத்து நேற்று காலை விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் சென்று செலவுக்குப்பணம் கேட்டார் காந்தி.
அதற்கு விஜயலட்சுமி மறுக்கவே, காந்தி அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். அத்தோடு நிற்காமல்அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து விஜயலட்சுமியின் தலையில் பலமாக அடித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவிஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்தப் படுகொலை சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications