காவிரி வழக்கில் இருந்து தமிழகம் விலக வேண்டும்: காங்கிரஸ்
சென்னை:
கர்நாடகத்திடம் இருந்து நீர் வாங்கித் தர முடியாத நதி நீர் ஆணையத்தின் வழக்கு விசாரணையில் இருந்து தமிழகம்விலகி விட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டன. தமிழகத்துக்கு உரிய நீரை வாங்கித்தரகாவிரி நதி நீர் ஆணையம் தவறிவிட்டது. இதனால், இந்த அமைப்பை நம்பி இனி பயனில்லை.
உடனடியாக காவிர் நடுவர் மன்றத்தை தமிழகம் அணுக வேண்டும். காவிரிப் படுகையில் எங்கு மழை விழுந்தாலும்கிடைக்கும் நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
தஞ்சை போன்ற மாவட்டங்களில் குறுவை பயிர்கள் வாட ஆரம்பித்துவிட்டன. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுசெயல்பட வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது. எனவே, அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசி தமிழகத்துக்குநீரைத் திறந்துவிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மணி சங்கர் ஐயர்கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications