For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை கலக்கிய மதுரை ரவுடி காட்டான் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் பல காலமாக அட்டூழியம் செய்து வந்த மதுரையைச் சேர்ந்த ரவுடி "காட்டான்" சுப்ரமணியம் போலீஸாரிடம் பிடிபட்டான்.

மதுரை அருகே உள்ள மேலூரைச் சேர்ந்தவர் "காட்டான்" சுப்ரமணியம். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை வந்து விட்டான் "காட்டான்".சென்னையில் அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் தனது ரவுடித்தனத்தை ஆரம்பித்தான்.

அந்தப் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது, கொலைகள், பணம் பறிப்பது, கடைகளில் மாமூல் வசூலிப்பது என சட்டவிரோதகாரியங்களில் ஈடுபட்டுப் "பெரியவர்" ஆனான்.

காட்டான் மீது 5 கொலை வழக்குகள், கடத்தல், கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 30 வழக்குகள் வரை உள்ளன. சில மாதங்களுக்கு முன்புஇவனைப் பிடிக்கச் சென்ற போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிட்டான். அப்போது தன்னை பிடிக்க வந்த போலீசாரையே தாக்கினான்.

பின்னர் தலைமறைவாக இருந்த இவன் சமீபத்தில் அணுகுண்டு ஆறுமுகம் என்ற ரவுடியை தீடீரென ரோட்டில் வைத்து வெட்டி வீழ்த்திவிட்டு மறுபடியும் தலைமறைவானான்.

காட்டான் சுப்ரமணியத்தை போலீஸார் வலைவீசித் தேடி வந்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையைச்சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் பிரித்விராஜன், செல்வராஜ், முருகேசன் ஆகியோர் அரும்பாக்கம் பஸ் நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகாலை வந்து கொண்டிருந்தபோது காட்டான் அவர்கள் கண்ணில் பட்டான்.

இதையடுத்து அவனை போலீஸார் விரட்டிச் சென்றனர். கடும் சேசுக்குப் பின் காட்டனை பாய்ந்து பிடித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X