கலாம்- லட்சுமி: இருவரும் தமிழர்களே
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வீராங்கனைகேப்டன் லட்சுமி செகலும் தமிழர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
87 வயதான லட்சுமி சென்னையில் பிறந்தவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். இவரதுதந்தை சுவாமிநாதனும் தாயார் அம்முவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தான். சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர்.
கம்யூனிஸ கொள்கைகளில் மிகத் தீவிர பற்று கொண்ட லட்சுமி தான் அகில இந்திய மாதர் சங்கத்தை நிறுவினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இப்போது கான்பூரில் வசித்து வருகிறார்.
பெண்கள், ஏழைகளுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளார்.
நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காக போராடியவர். தேசிய ராணுவத்தில் கேப்டனாகபணியாற்றிய செகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செகல்- லட்சுமி தம்பதியின் மகள் தான் சுபாஷினிஅலி. இவர் தான் இப்போது அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவி.
மத்திய அரசின் பத்மவிபூஷண் விருது பெற்றவர் லட்சுமி செகல். ஈடு இணையற்ற நாட்டுப் பற்று கொண்டவர்.
தன்னை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த கட்சி முடிவு செய்ததையடுத்து அவர் நேற்றே டெல்லி வந்துசேர்ந்துவிட்டார். திங்கள்கிழமை அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications