குற்றவாளிகளிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய நீதிபதி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வி.சி.ராஜமாணிக்கம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கானஉத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
பெரம்பலூர் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் வி.சி.ராஜமாணிக்கம். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.பொதுமக்களும், வக்கீல்களும் இவர் மீது ஏராளமான புகாரை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தனர்.
தீர்ப்பு கூறுவதற்கு இவர் லஞ்சம் கேட்பதாகவும் பல புகார்கள் வந்திருந்தன.
இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் ராஜமாணிக்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை கொடுக்க நீதிமன்ற அதிகாரிகள்ராஜமாணிக்கம் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது வீட்டின் கதவின் மீது நீதித்துறை நடுவர் பூங்குழலி முன்னிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ஒட்டப்பட்டது.
நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போய் உள்ளது. இப்போது தான் அரசு விழித்துக் கொண்டுள்ளது.
இந்த பெரம்பலூர் நீதிபதி ராஜமாணிக்கம் அரசு வழக்கறிஞரானை பிச்சைப் பிள்ளை என்பருடன் கூட்டு சேர்ந்து கொண்டு லட்சக்கணக்கில்பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகளை அளித்து வந்துள்ளார்.
இந்தப் பணத்தை வழக்கறிஞர் பிச்சைப்பிள்ளை வசூல் செய்து நீதிபதிக்கு கொடுத்து வந்துள்ளார். இது தவிர வேறு டீல்களை தனதுவீட்டிலேயே வைத்து முடித்து பெட்டி பெட்டியாக லஞ்சம் வாங்கியுள்ளார் இந்த நீதிபதி.
இவர் மீது பல புகார்கள் வந்ததால் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.விசாரணையில் இவரது பிராடுத்தனங்கள் உறுதியாயின. இதையடுத்து இவரை உடனே சஸ்பெண்ட் செய்துள்ளார் தலைமை நீதிபதி.












Click it and Unblock the Notifications