இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
மும்பை:
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்துத் தான் இனிஇந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எப்போதெல்லாம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருகிறதோ உடனடியாக இந்தியாமுழுவதும் அதற்கெற்ப விலையை மாற்றி அமைத்துக் கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசுஅனுமதி தந்துவிட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் இது அமலுக்கு வந்தது. இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோல்விலை சராசரியாக லிட்டருக்கு ரூ. 1.25 உயர்ந்தது.
இப்போது மீண்டும் 30 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று இரவு முதல் அமலுக்குவந்துவிட்டது.
இதனால் சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ. 31.30 ஆக இருக்கும். டீசல் விலை லிட்டர் ரூ. 19.88 ஆகஉயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications