4 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 4 அரசு வக்கீல்கள் அப்பதவிகளிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.
சமீபத்தில் தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர்டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி. சங்கரும் சமீபத்தில் மாற்றப்பட்டார். அவர் நேற்று தான்மத்திய அரசுப் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நான்கு அரசு வக்கீல்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவில் பிரிவு வக்கீல் குமரேஷ் பாபு, கல்விப் பிரிவு வக்கீல் அரவிந்த் சுப்ரமணியன், வரிகள் பிரிவு வக்கீல்கிருஷ்ணமூர்த்தி மற்றும் காமதேவன் ஆகியோரின் பதவிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அரசு அறிவிப்புஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications