காவிரி: கர்நாடக முதல்வரை சந்திக்கிறது தமிழக காங்கிரஸ் குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரியில் நீர் வழங்கக் கோரி தமிழக காங்கிரஸ் கட்சியின் குழு கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை இருதினங்களில் சந்தித்துப் பேச்சு நடத்தும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறினார்.

நிருபர்களிடம் இன்று பேசிய அவர்,

காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பாகத் தான் உள்ளன. இந்தப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சரும் உருப்படியான யோசனையைத் தரபோவதில்லை. அப்படியே அவர்கள் தப்பித் தவறி ஏதையாவது உருப்படியாக பேசிவிட்டாலும் அதை ஜெயலலிதாஏற்கப் போவதில்லை.

இதனால் அமைச்சரவைக் கூட்டம், மறு வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாமே வெறும்கண்துடைப்புகள் தான்.

இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்கைக் கடைபிடிக்காமல் ஜெயலலிதா உடனடியாக கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேச வேண்டும். அதனால் பலன் கிடைக்காவிட்டால் அனைத்துக் கட்சியினரைஅழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்.

எங்கள் கட்சியின் குழு 2 நாட்களில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து காவிரியில் நீர் விடுமாறு கோரிக்கை விடுக்கும்என்றார் இளங்கோவன்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+