காவிரி நீர் கோரி கிருஷ்ணாவை வாசனும் சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சுந்தரப்பெருமாள்கோவில்:

காவிரியில் தண்ணீர் விடக் கோரி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்திக்கச் செல்லும் காங்கிரஸ்எம்.எல்.ஏக்களுடன் தானும் செல்லப் போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.

சுந்தரப்பெருமாள்கோவிலில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு அவர் நேற்று சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் சந்தித்து கட்சிகள் இணைப்பு விழா குறித்து ஆலோசனைநடத்தினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய வாசன்,

காவிரி விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழகத்துக்கு கர்நாடக முதல்வர் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.

கட்சி பேதம் பார்க்காமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணாவையும்பிரதமரையும் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க வேண்டும்.

விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள்குழுவினர் கிருஷ்ணாவை சந்தித்துப் பேச முடிவெடுத்துள்ளனர். அவர்களுடன் நானும் பெங்களூர் சென்றுகிருஷ்ணாவைச் சந்தித்து நீரைத் திறந்து விட கோரிக்கை விடுப்பேன்.

கிருஷ்ணாவைச் சந்திக்க காங்கிரஸ் கட்சித் தலைமையின் அனுமதி பெறப்படும். இந்த விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ள உதவித் திட்டங்கள் தாற்காலிகமானவை. இதனால், விவசாயிகளின் பிரச்சனை தீரப்போவதில்லை. காவிரியில் நீர் வாங்குவது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+