இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பான்பராக் லாபியால் பதவி இழந்த மத்திய அமைச்சர்
டெல்லி:
மத்தியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதால் 3 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பாரதீய ஜனதாவின் தலைவராக நியமிக்கப்பட்ட உள்ள வெங்கைய்யா நாயுடு தனது ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே போல கட்சிப் பணிக்குத் திரும்ப உள்ள அருண் ஜேட்லி தனது சட்டத்துறை அமைச்சர் பதவியை விட்டுவிலகினார். இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் வாஜ்பாயிடம் ஒப்படைத்தனர்.
அமைச்சரின் பதவியை பறித்த அத்வானி:
இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சி.பி. தாக்கூரை பதவி விலகுமாறு துணைப் பிரதமராகபதவியேற்றுள்ள அத்வானி உத்தரவிட்டார். இதையடுத்து தாக்கூர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
சமீபகாலமாக தாக்கூருக்கும் விலங்குகள் நலத்துறை இணை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே கடும்மோதல் நடந்து வந்தது. விலங்குகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக இருவரும்மோதினர்.
இதனால் இருவரின் பதவிகளையும் பறிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தாக்கூரை மட்டும் ராஜினாமாசெய்யச் சொல்லியிருக்கிறார் அத்வானி.
பா.ஜ.க. அலுவலகம் மீது தாக்குதல்:
தாக்கூர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராவார். தாக்கூரை பதவி விலகச்சொன்னதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் பாட்னாவில் பாரதிய ஜனதா அலுவலகத்தைத் தாக்கினர்.நாற்காலிகளை தூக்கி தெருவில் வீசினர்.
பாட்னா ரயில் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பான்பராக் லாபி நெருக்குதலா?:
இந் நிலையில் தனது பதவி பறி போக பான்பராக், குட்கா தயாரிப்பாளர்கள் தான் காரணம் என்று தாக்கூர்கூறியுள்ளார். பான்பராக் போன்ற புகையிழை போதைப் பழக்கத்துக்கு எதிராக சில கடும் நடவடிக்கைகளைஎடுத்தார் தாக்கூர்.
பான்பராக் விற்பனைக்கும் சில இடங்களில் தடை விதித்தார். மார்வாடிகளான இதன் தயாரிப்பாளர்கள் பா.ஜ.க.அனுதாபிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் நெருக்குதல் காரணமாகவே தாக்கூரின் பதவி பறிபோயுள்ளது.
பிரதமரின் அதிகாரம் குறைப்பு: காங்
அத்வானி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துளளது.
அக் கட்சியின் செய்தித் தொட்பாளர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், இதன்மூலம் அத்வானிக்கு அதிகாரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றுகூறுவதைவிட பிரதமர் வாஜ்பாயின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது என்று சொல்வது தான் சரி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிற கட்சிகளை ஒடுக்கிவிட்டு பா.ஜ.க. தனது அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதை அக் கட்சிகள் உணர்ந்துகொள்வது நல்லது என்றார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications