கடத்தப்பட்ட ரூ. 20 லட்சம் கிரானைட் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
குவாரியில் இருநது முறைகேடாக கடத்தப்பட்ட 40 டன் கிரானைட் கற்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திருநெல்வேலி அருகே உள்ள குலவணிகர்புரத்தில் கிரானைட் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து 9.2 கியூபிக் மீட்டர்கிரானைட்டை கொண்டு செல்ல ஒரு லாரியின் உரிமையாளர் வரி கட்டினார்.
ஆனால், லாரியில் 15.6 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை ஏற்றி கடத்திச் சென்றார். இந்த லாரியை திடீரெனவழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டபோது இந்த மோசடி தெரியவந்தது. இந்தக் கற்களின் மதிப்பு ரூ. 20லட்சமாகும்.
இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
-->












Click it and Unblock the Notifications