வெங்காய மூட்டைக்குள் சாராய பாக்கெட்டுகளை வைத்து அமோக விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெங்காயம் விற்பதாகக் கூறி கூடைகளில் வைத்து கர்நாடக சாராயத்தை விற்பனை செய்த "முட்டைக் கூடை"நாராயணன் என்ற வியாபாரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை அருகே உள்ளது லட்சுமிபுரம். இது செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வருகிறது. இங்கு "முட்டைக் கூடை"நாராயணன் என்பவர் வெங்காயம் விற்பதாக கூறி சாராயம் விற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து சென்னை நகர போலீஸாரும், செங்கை மாவட்ட போலீஸாரும் இணைந்து நாராயணன் வீட்டில் திடீர்சோதனை நடத்தினர்.

ஆனால் போலீஸார் வரப் போவது குறித்து நாராயணனுக்குத் தகவல் வரவே அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த சோதனையின் போது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வெங்காயம் வைக்கப்பட்டிருந்த 92கூடைகளில், 40,000 பாக்கெட் கள்ளச்சாராயம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும்கர்நாடகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

போலீஸார் விசாரணை நடத்தியபோது, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விற்பதாக கூறி அக்கம் பக்கத்தில்உள்ளவர்களை நாராயணன் ஏமாற்றி வந்துள்ளார். வெங்காயக் கூடைகளில் சாராய பாக்கெட்டுக்களைப் போட்டுவிற்பனை செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளார். ஐந்து வழக்குகளும் இவர் மீதுஉள்ளன.

தலைமறைவாகி விட்ட நாராயணனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+