தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
சென்னை:
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள்பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஒரே மாதத்தில் (ஜூன்) 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைஉயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும்உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களுக்கு மறு விற்பனை வரியை தமிழக அரசு அதிகப்படுத்தியுள்ளதன் காரணமாக நேற்றுநள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்தெரிவித்தனர்.
சென்னையில் பெட்ரோல் விலை 34 காசு உயர்ந்தால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 31.64ஆகியுள்ளது. அதே போல் டீசல் விலை 18 காசு அதிகரித்து ரூ.20.06ஆக உள்ளது.
அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுவதால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications