குறைகளை அறிய பயணிகளுடன் பயணம் செய்வேன்: மூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரயில் பயணிகளின் குறைகளை நேரில் கண்டறிவதற்காக ரயில்களில் பயணிகளுடன் பயணம் செய்யப் போவதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.

மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று (வியாழக்கிழமை) காலை அவர் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, பாமக தொண்டர்கள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் அவரைவரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மூர்த்தி பேசுகையில்,

பல்வேறு பிரிவு ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். ரயில் பயணிகளின் குறைகளைநேரில் கண்டறிவதற்காக ரயிலில் பயணிகளுடன் பயணம் செய்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளேன்.

ரயில் பயணிகளின் குறைகளைக் களைவதே எனது முதல் பணி. அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் தேங்கிக் கிடக்குமபல்வேறு ரயில்வேத் திட்டங்களை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார் மூர்த்தி.

இதற்கிடையே இன்று மாலை சென்னை (சென்ட்ரல்) - விசாகப்பட்டினம் இடையிலான வாராந்தர எக்ஸ்பிரஸ்ரயிலை மூர்த்தி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்குஒவ்வொரு வியாழக்கிழமையும், அங்கிருந்து சென்னைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+