தமிழகம் முழுவதும் ஜெவுக்கு எதிரான போஸ்டர்கள்: மதிமுக தொண்டர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் மதிமுகவினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 6 மதிமுக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
புலிகள் ஆதரவாளர்களையும் ரகசிய போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். வைகோ கைது செய்யப்பட்டால்சில இடங்களில் வன்முறை வெடிக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால், முன்னெச்சரிக்கையாக முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது. மாநிலம் முழுவதும்மதிமுக பிரமுகர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வைகோவுக்கு ஆதரவாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டிய 6 மதிமுகதொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் 3 மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
வைகோவின் சொந்த ஊரான சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள்அனைவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு எதிரான போஸ்டர்கள் மதிமுகவினரால் தொடர்ந்துஒட்டப்பட்டு வருகின்றன. இவற்றை போலீசாரே கிழித்து எறிந்து வருகின்றனர்.