ஆகஸ்டு 14ல் காங்கிரஸ்-தமாகா இணைப்பு
டெல்லி:
காங்கிரசுடன் தமாகாவை இணைக்கும் விழா வரும் ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
முதலில் ஜனாதிபதி தேர்தலையொட்டி இணைப்பு விழா ஜூலை 15ம் தேதியிலிருந்து ஆகஸ்டு 1ம் தேதிக்குமாற்றப்பட்டது.
பின்னர் வேறு சில காரணங்களுக்காக ஆகஸ்டு 12ம் தேதி இணைப்பு விழா நடைபெறும் என்றுதெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தேதியில் தான் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் இதுஅறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணைப்பு விழா மீண்டும் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதாலா, ஆகஸ்டு 14ம் தேதி இணைப்பு விழாநடைபெறும் என்றும் இணைப்பு விழா நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரிடம்தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னிதாலா கூறினார்.
ஆகஸ்டு 14ம் தேதி காலை காங்கிரஸ் கட்சியுடன் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி இணைப்பு விழாநடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அங்கிருந்து நேராக மதுரை சென்றுகாங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
-->