தனி ஈழ பேராட்டத்துக்கு என் ஆதரவு தொடரும்: வைகோ அறிவிப்பு
சிகாக்கோ:
விடுதலைப் புலிகளின் தனி ஈழப் போராட்டத்துக்கு எனது ஆதரவு தொடரும் என மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்துள்ளார்.
சிகாக்கோவில் தொலைக்காட்சி நிருபரிடம் பேசிய அவர்,
நான் பொறுப்பு மிக்க கட்சியை நடத்தி வருகிறேன். என்னால் தமிழகத்தில் எந்த அமைதி சீர்கேடும் நடந்ததில்லை.கைது போன்ற நடவடிக்கைகளைக் காட்டி என்னை அச்சுறுத்திவிட முடியாது.
தமிழகத்தில் என்னுடைய பேச்சினால் கலவரமோ, வன்முறையோ ஏற்பட்டதாக நிரூபிக்க முடியுமா?
பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தத் தான் பொடோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அரசியல்காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற தடையே உள்ளது.
ஜெயலலிதாவின் மிரட்டல்களுக்கு நான் பயந்துவிட மாட்டேன். ஈழத் தமிழர்களுக்கு எனது ஆதரவு தொடரும்என்றார்.
வைகோவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி ஈரோட்டில் நிருபர்களிடம்பேசுகையில், மதிமுகவை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அதை எங்கள் தலைவர் வைகோவும் நாங்களும் சமாளிததுக் காட்டுவோம் என்றார்.